sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

கடன் பெறும் தகுதியை இழந்த 30 லட்சம் பேர்

/

கடன் பெறும் தகுதியை இழந்த 30 லட்சம் பேர்

கடன் பெறும் தகுதியை இழந்த 30 லட்சம் பேர்

கடன் பெறும் தகுதியை இழந்த 30 லட்சம் பேர்


UPDATED : மார் 29, 2025 11:51 PM

ADDED : மார் 29, 2025 11:26 PM

Google News

UPDATED : மார் 29, 2025 11:51 PM ADDED : மார் 29, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா:வங்கிகள் கடன் வழங்கும் விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளதால், கடந்தாண்டு மார்ச் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மட்டும், 30 லட்சம் பேர் கடன் வாங்கும் திறனை இழந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 60 நாட்களுக்கு மேலாக கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மற்றும் 3,000 ரூபாய்க்கு கூடுதலாக கடன் பாக்கி வைத்துள்ளவர்களுக்கு, கடன் வழங்குவதை வங்கிகள் நிறுத்தியுள்ளதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வாராக் கடன் அதிகரித்து வருவதால், வங்கிகள் தங்களின் கடன் வழங்கும் விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றன. இதன் காரணமாக, பொருளாதார கட்டமைப்பில் கீழே உள்ள மக்களுக்கு, முறையான வழிகளிலிருந்து கடன் கிடைப்பது இயலாத காரியமாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே கடன் பெறுவது குறைந்து வரும் நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்த தவறியவர்களுக்கு, மீண்டும் கடன் வழங்கப்படாததே இதற்கு முக்கிய காரணம் என, வங்கித்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், வங்கிகளின் வணிக நடைமுறைகளும் இதற்கு அனுமதிப்பதில்லை என கூறுகின்றனர்.

இதன் காரணமாக, வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 8.70 கோடியிலிருந்து டிசம்பரில் 8.40 கோடியாக குறைந்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் நிலவரப்படி, வங்கிகள் வழங்கியுள்ள மொத்த கடன் 3.92 லட்சம் கோடி ரூபாய். இதில் 13 சதவீதம் வாராக் கடனாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளின் நிகர லாபம் பாதிக்கப்படுகிறது.

வாராக் கடன் பட்டியலில் உள்ளவர்களுக்கு மீண்டும் கடன் வழங்கப்படாததால், இவர்கள் கந்து வட்டி போன்ற முறையற்ற வழிகளை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

முறையற்ற கடன் பெறுதலை தடுக்கவே அனைவருக்கும் வங்கி கடன் கிடைக்க ஏதுவாக பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் அதே சூழல் ஏற்பட்டுள்ளது.

எச்சரிக்கும் உதய் கோட்டக்


நாட்டின் முன்னணி வங்கிகள், ஓராண்டு டிபாசிட்டுகளுக்கு அதிக வட்டி அளிப்பதுடன், அதை விட குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்குவது, வங்கிகளின் லாபத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாக, வங்கியாளர் உதய் கோட்டக் கவலை தெரிவித்து உள்ளார்.இது குறித்து தன் சமூகவலை தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:வங்கிகளில் சில்லரை டிபாசிட் குறைந்து வரும் நிலையில், ஓராண்டுக்கு 8 சதவீத வட்டி விகிதத்தில், முன்னணி வங்கிகள் மொத்தமாக டிபாசிட்டுகளை வாங்குகின்றன. நடைமுறை செலவுகள் சேர்க்காமல், காப்பீடு உள்ளிட்டவை சேர்த்து, இதற்கான வட்டி விகிதம் 9 சதவீதமாக மாறும். ஆனால், வங்கிகள் 8.50 சதவீதத்துக்கு வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. 9 சதவீதம் வட்டிக்கு வாங்கி, 0.50 சதவீதம் குறைவாக, அதாவது 8.50 சதவீதத்துக்கு கடன் வழங்குகின்றன. ரெப்போ வட்டி மேலும் குறையும் போது, நடைமுறை செலவுகள் என்ன ஆகும்? டிபாசிட் தொகை மேலும் குறைந்தால், வங்கி அமைப்புக்கு மிகப்பெரிய சவாலாக மாறும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.








      Dinamalar
      Follow us