sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஒரே நாளில் 3.41 லட்சம் டன்: சென்னை துறைமுகம் சாதனை

/

ஒரே நாளில் 3.41 லட்சம் டன்: சென்னை துறைமுகம் சாதனை

ஒரே நாளில் 3.41 லட்சம் டன்: சென்னை துறைமுகம் சாதனை

ஒரே நாளில் 3.41 லட்சம் டன்: சென்னை துறைமுகம் சாதனை


ADDED : ஜன 30, 2024 10:59 AM

Google News

ADDED : ஜன 30, 2024 10:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை துறைமுகம் கடந்த 27ம் தேதியன்று ஒரே நாளில் 3,40,583 டன் சரக்குகளை கையாண்டு, புதிய சாதனை படைத்து உள்ளது.

நாட்டில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில், மூன்றாவது பெரிய துறைமுகமாக சென்னை துறைமுகம் திகழ்கிறது. சென்னை கடற்கரை பகுதியில் 1639ம் ஆண்டு கப்பல் வணிகப் போக்குவரத்து துவங்கியது. 1881ம் ஆண்டு, செயற்கை துறைமுகம் அமைக்கப்பட்டது.

படிப்படியாக வளர்ந்து இன்று, இந்த துறைமுகத்தில் 24 கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

கார்கள், கன்டெய்னர்கள், உரம், எண்ணெய் உள்ளிட்டவை இங்கு அதிகளவில் கையாளப்படுகின்றன. இந்நிலையில், இத்துறைமுகம் கடந்த 27ம் தேதியன்று, ஒரே நாளில் 3.41 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன், 2021 ஏப்., 30ம் தேதி, 3.12 லட்சம் டன் சரக்குகள் கையாண்டதே, இதுவரை பெரிய சாதனை அளவாக இருந்தது. தற்போது புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

இந்த சாதனையை நிகழ்த்த உறுதுணையாக இருந்த துறைமுக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும், சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டு தெரிவித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us