அமலாக்கத்துறை சோதனையால் '3 எம் இந்தியா' பங்குகள் சரிவு
அமலாக்கத்துறை சோதனையால் '3 எம் இந்தியா' பங்குகள் சரிவு
ADDED : மார் 15, 2024 10:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'3எம் இந்தியா' நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனையால், அதன் பங்குகள் விலை வீழ்ச்சிஅடைந்தன.
பல்வகை தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனமான, 3 எம் இந்தியா நிறுவனத்தின், பெங்களூரு அலுவலகத்தில், சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதம் வரை சரிவடைந்து, வர்த்தகத்தின் இறுதியில், மும்பை பங்கு சந்தையில் 30,500 ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் சந்தை மதிப்பு 33,033 கோடி ரூபாயாக குறைந்தது. முன்னதாக, வெள்ளியன்று 30,300 ரூபாய் என்ற உயர்வுடன் துவங்கியது.
சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததுடன், அவர்கள் கேட்ட விபரங்கள் மற்றும் விளக்கங்களுக்கு பதிலளிக்கப்பட்டதாக இந்நிறுவனம் தெரிவித்தது.

