sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தோல், காலணி துறையில் 65 லட்சம் வேலைவாய்ப்பு

/

தோல், காலணி துறையில் 65 லட்சம் வேலைவாய்ப்பு

தோல், காலணி துறையில் 65 லட்சம் வேலைவாய்ப்பு

தோல், காலணி துறையில் 65 லட்சம் வேலைவாய்ப்பு


ADDED : ஏப் 24, 2025 11:40 PM

Google News

ADDED : ஏப் 24, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''வரும் 2030ல், தோல் பொருட்கள் மற்றும் காலணி துறைகளில் வேலைவாய்ப்பு, 65 லட்சமாக அதிகரிக்கும்,'' என, தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்து உள்ளது.

சி.எஸ்.ஐ.ஆர்., - சி.எல்.ஆர்.ஐ., எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின், 78வது நிறுவன தினம், சென்னை கிண்டியில் நேற்று நடந்தது.

இதில், கோலாப்பூர் கைவினைஞர்களுக்கு, புதிய வடிவமைப்பு மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்க, சி.எல்.ஆர்.ஐ., - மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர், காலாபுரி அறக்கட்டளை இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில், கவுன்சிலின் செயல் இயக்குநர் ஆர்.செல்வம் பேசியதாவது:

வரும் 2030ல், தோல் மற்றும் காலணி தொழில் வருவாய், 4.30 லட்சம் கோடி ரூபாயாகவும்; வேலைவாய்ப்பு, 65 லட்சமாகவும் அதிகரிக்கும். தற்போது, 45 லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு தெரிவித்தார்

ஒப்பந்தம் குறித்து, சி.எல்.ஆர்.ஐ., இயக்குநர் ஸ்ரீராம் கூறியதாவது:

'கோலாபுரி' காலணி என்பது, புவிசார் குறியீடு பெற்றது. இது, கர்நாடகா, மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள சில கிராமங்களில் மட்டும் தயாரிக்கப்படுகிறது. தோல் பதனிட அதிக காலம் பிடிக்கும் என்பதால் தயாரிப்புக்கும் அதிக நாட்கள் ஆகும்.

மேலும் வடிவம் உள்ளிட்டவற்றிலும் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. பழைய சிகப்பு கலரில் தான் தயாரிக்கப்பட்டன.

இந்த ஒப்பந்தம் வாயிலாக மீண்டும் பயிற்சி அளித்து, தற்போது கிடைக்கும் தோலில் இளைஞர்கள் விரும்பும் வகையில், புதிய வண்ணங்களில் தரமான காலணி தயாரிப்பது தொடர்பாக, சி.எல்.ஆர்.ஐ., பயிற்சி அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us