ADDED : அக் 23, 2024 02:23 AM

• அமெரிக்க, ஆசிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக, வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன
• இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த ஆக.,14க்கு பிறகு, நிப்டி குறியீடு 1.25 சதவீதம் சரிவடைந்து, 24,472 புள்ளிகளிலும்; சென்செக்ஸ் குறியீடு 1.15 சதவீதம் சரிவடைந்து 80,220 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்தன
• நிப்டி குறியீட்டில் அனைத்து துறை பங்குகளும் வீழ்ச்சி கண்டன. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பங்குகள் மோசமான சரிவை கண்டன
• மும்பை பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 453.7 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 444.7 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 9.34 லட்சம் கோடி ரூபாய் இழந்து உள்ளனர்
• மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம், அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகள், இந்திய சந்தையில் இருந்து அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேற்றம் ஆகியவை முதலீட்டாளர்கள் மத்தியில், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---3,979 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.61 சதவீதம் அதிகரித்து, 74.74 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 1 பைசா குறைந்து 84.08 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி
நெஸ்லே இந்தியா
இன்போசிஸ்
அதிக இறக்கம் கண்டவை
பாரத் எலக்ட்ரானிக்ஸ்
மஹிந்திரா & மஹிந்திரா
கோல் இந்தியா
அதானி என்டர்பிரைசஸ்
எஸ்.பி.ஐ.,