ADDED : ஜூலை 12, 2025 10:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை, கொடிசியா வளாகத்தில், 'அக்ரி இன்டெக்ஸ் 2025' கண்காட்சி, கடந்த 10ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
மண் துவங்கி, விதை, நாற்று, நடவு, இயந்திரம், தொழில்நுட்பம், மானியம், கடனுதவி, மதிப்புக் கூட்டல் அவற்றை விற்பனை செய்வது வரை வேளாண்மை, தோட்டக்கலை கால்நடை, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு என, துறைசார்ந்த அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் காணும் வகையில், 'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி அமைந்திருப்பது விவசாயிகளிடம் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது.
உள்நாட்டின் இயற்கை விவசாயம் முதல் வெளிநாட்டு தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய ரக இயந்திரங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டு, செயல்விளக்கம் காண்பிக்கப்படுகிறது.
450க்கும் மேற்பட்ட வெளி மாநில, வெளி நாட்டு நிறுவனங்கள் 600 ஸ்டால்கள் அமைத்துள்ளன.