ADDED : பிப் 17, 2026 01:43 AM

கடந்த 2023ம் ஆண்டு நம் நாட்டில் 4.80 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்து, 1.72 லட்சம் பேர் உயிரிழந்தனர். உலகில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது.
மாநாட்டில் நடந்த சாலை பாதுகாப்பில் ஏ.ஐ., என்ற அமர்வில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பங்கஜ் அகர்வால், வாகனம்- டூ - வாகனம் (வி-டூ-வி) தகவல் தொடர்பு போன்ற ஏ.ஐ., தொழில்நுட்பங்கள் விபத்துகளை குறைக்க உதவும் என்றார்.மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, வி - டூ - வி தகவல் தொடர்பை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக முன்பே தெரிவித்திருந்தார். 2030க்குள் சாலை விபத்துகளை பாதியாக குறைப்பதே இதன் இலக்காக உள்ளது.
யு.பி.ஐ., ஒன் வேர்ல்டு
ஏ.ஐ., மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கென 'யு.பி.ஐ., ஒன் வேர்ல்டு' என்ற சேவையை என்.பி.சி.ஐ., எனும் 'நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' அறிமுகம் செய்துள்ளது. உள்ளூரில் வங்கி கணக்கின் தேவையின்றி, அவரவர் நாட்டின் வங்கி கணக்கு வழியாகவே, இந்தியாவின் உடனடி கட்டண அமைப்பை பயன்படுத்தும்
வசதியை இது வழங்குகிறது.

