sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

போயிங் -உதவியுடன் சென்னையில் 'ஏர் டாக்சி'

/

போயிங் -உதவியுடன் சென்னையில் 'ஏர் டாக்சி'

போயிங் -உதவியுடன் சென்னையில் 'ஏர் டாக்சி'

போயிங் -உதவியுடன் சென்னையில் 'ஏர் டாக்சி'


ADDED : ஜன 04, 2025 12:18 AM

Google News

ADDED : ஜன 04, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நம் நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே வான்வழி போக்குரவத்து உள்ளது. ஆனால், ஒரு நகரத்திற்குள் வான்வழி போக்குவரத்து கிடையாது. சில வெளிநாடுகளில் நகரத்துக்குள்ளேயே ஒருவர் அல்லது இருவர் பயணிக்கும் வகையிலான சிறிய ரக விமானத்தில் செல்லும் வான்வழி போக்குவரத்து வசதிகள் உள்ளன.

டில்லி, பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் அண்மைக் காலமாக சாலை போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தமிழக அரசு சென்னையில், 'ஏர் டாக்சி' எனப்படும் இருவர் பயணிக்கும் சிறிய விமானங்களை இயக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, ஒரு நகரத்திற்குள் வான்வழியாக மனிதர்கள் விரைவாக பயணிக்க முடியும். மருந்து உள்ளிட்ட சரக்குகளையும் விரைந்து எடுத்துச் செல்ல முடியும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பாதுகாப்பான அம்சங்கள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, 'போயிங்' நிறுவனத்துடன் இணைந்து, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us