ADDED : நவ 14, 2024 03:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'ஆலிசன் டிரான்ஸ்மிஷன்' நிறுவனம், சென்னையை அடுத்த ஒரகடத்தில் உள்ள ஆலையில், 763 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னையில், அந்நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே தொழில் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், நேற்று கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில், தொழில் துறை செயலர் அருண் ராய், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலையின் விரிவாக்க நடவடிக்கையால், 167 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆலிசன் டிரான்ஸ்மிஷன் நிறுவனம், ஒரகடத்தில் உள்ள ஆலையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.