95 சதவீதம் புகார்களுக்கு வங்கி குறைதீர் மையம் தீர்வு
95 சதவீதம் புகார்களுக்கு வங்கி குறைதீர் மையம் தீர்வு
ADDED : ஜன 27, 2025 12:58 AM

மும்பை:கடந்த நிதியாண்டில் ஒருங்கிணைந்த வங்கி குறைதீர்ப்பாளர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட புகார்களில், 95.10 சதவீதம் புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து ஆர்.பி.ஐ., வெளியிட்ட அறிக்கை:
வங்கிச்சேவை குறைபாடு தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது வங்கி சாராத நிறுவனங்கள், 30 நாட்களுக்குள் தீர்வு காணாவிட்டால், வாடிக்கையாளர்கள் வங்கி குறைதீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம்.
இதன்படி, கடந்த 2023--24ம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் மையம், பெறப்பட்ட 2,84,355 புகார்களில், 95.10 சதவீதம் புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளது.
பெறப்பட்ட மொத்த புகார்களில், ஆன்லைன் போர்ட்டல், இ-மெயில் மற்றும் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர் கண்காணிப்பு மையம் உள்ளிட்டவை சேர்த்து, டிஜிட்டல் வடிவில் 88.77 சதவீத புகார்களும்; அதிகபட்சமாக, தனிநபர்களிடம் இருந்து 2,56,527 புகார்களும் பெறப்பட்டன.

