sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுடன் வாங்குவோர் -- விற்போர் சந்திப்பு

/

ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுடன் வாங்குவோர் -- விற்போர் சந்திப்பு

ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுடன் வாங்குவோர் -- விற்போர் சந்திப்பு

ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுடன் வாங்குவோர் -- விற்போர் சந்திப்பு


ADDED : மே 22, 2025 11:05 PM

Google News

ADDED : மே 22, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மே 23-

''தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை உலகம் முழுதும் கொண்டு செல்வதற்கு, பல நாடுகளுடன் இணைந்து, வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்,'' என, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அதுல் ஆனந்த் தெரிவித்தார்.

எஸ்.ஐ.சி.சி.ஐ., எனப்படும் தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையுடன் இணைந்து தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், இந்திய - ஜெர்மனி சிறு, குறு, நடுத்தர தொழில் துறை கருத்தரங்கை சென்னையில் நேற்று நடத்தியது.

இதில், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயலர் அதுல் ஆனந்த் பேசியதாவது:

ஜெர்மனி மற்றும் தமிழக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை இணைக்கும் பாலமாக இந்த கருத்தரங்கு உள்ளது. தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 33 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றின் தயாரிப்புகளை உலகம் முழுதும் எடுத்து செல்வதற்கு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us