sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

வாங்குவோர் -- விற்போர் சந்திப்பு தமிழக அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு

/

வாங்குவோர் -- விற்போர் சந்திப்பு தமிழக அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு

வாங்குவோர் -- விற்போர் சந்திப்பு தமிழக அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு

வாங்குவோர் -- விற்போர் சந்திப்பு தமிழக அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு


ADDED : டிச 28, 2024 10:37 PM

Google News

ADDED : டிச 28, 2024 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை உலக அளவில் கொண்டு சென்று, சந்தை வாய்ப்பை ஏற்படுத்த, தமிழகம் முழுதும் வாங்குவோர், விற்போர் சந்திப்புகள் நடத்துவதற்கு, 5.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

தமிழக குறு, சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து, மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் அதிக பொருட்களை கொள்முதல் செய்வதற்காக, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 'சவ்மெக்ஸ் 2024' தொழில் கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. இது இன்று நிறைவடைகிறது.

இதில், பொது மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள் அடங்கிய கண்காட்சி அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று பார்வையிட்டார்.

பின், அவர் கூறியதாவது:

கடந்த மாதம் அரசின் சார்பில், கோவையில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில், 14 வெளிநாடுகளில் இருந்து, 28 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், 115.35 கோடி ரூபாய்க்கு கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

கடந்த ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடத்தப்பட்ட வாங்குவோர், விற்போர் சந்திப்பில், 174 நிறுவனங்களிடம் இருந்து, 42.68 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளை உலகளவில் கொண்டு சென்று, சந்தை வாய்ப்பை ஏற்படுத்த தமிழகம் முழுதும் வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடத்தப்படுகிறது. இதற்காக, 5.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us