sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஏலக்காய் உற்பத்தி பாதிப்பால் விலை ரூ.3,500 ஆக உயர வாய்ப்பு

/

ஏலக்காய் உற்பத்தி பாதிப்பால் விலை ரூ.3,500 ஆக உயர வாய்ப்பு

ஏலக்காய் உற்பத்தி பாதிப்பால் விலை ரூ.3,500 ஆக உயர வாய்ப்பு

ஏலக்காய் உற்பத்தி பாதிப்பால் விலை ரூ.3,500 ஆக உயர வாய்ப்பு


ADDED : டிச 30, 2024 12:55 AM

Google News

ADDED : டிச 30, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:சர்வதேச அளவில் இந்தியா, கவுதமாலா நாடுகளில் ஏலக்காய் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

சர்வதேச மார்க்கெட்டில் இந்திய ஏலக்காய்க்கு போட்டியாக, கவுதமாலா ஏலக்காய் உள்ளது. தரத்தில் சிறந்ததாக இந்திய ஏலக்காய் இருந்தாலும், விலை குறைத்து கொடுப்பதால், கவுதமாலா ஏலக்காயால் இந்திய ஏலக்காய் ஏற்றுமதிக்கு சிக்கல் ஏற்படுகிறது.நடப்பாண்டு வானிலை மாற்றங்கள் காரணமாக, இந்திய ஏலக்காய் உற்பத்தி 30 முதல் 40 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் அழுகல், பூஞ்சான் நோய்கள் தாக்கி உள்ளன.

ஏலக்காய் சாகுபடி ஆலோகர் அன்பழகன் கூறியதாவது:

இந்திய ஏலக்காய் உற்பத்தி நடப்பாண்டு 15,000 முதல் 18,000 டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் சராசரி விலை கிலோவுக்கு, 1,650 ரூபாயில் இருந்து, தற்போது 2,950 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வரும் 2025 ஏப்ரலில் விலை கிலோ 3,500 ரூபாய் வரை உயரலாம்.

இந்தியாவுக்கு போட்டியாக விளங்கும் கவுதமாலாவில் கடும் வறட்சி நிலவுகிறது. அங்கும் நடப்பாண்டு மகசூல் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் உற்பத்தி பாதிப்பு இருந்தாலும், இந்திய ஏலக்காய் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் இந்திய ஏலக்காய்க்கு வரவேற்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us