sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தமிழகத்தின் 3வது 'டைடல் பார்க்' பட்டாபிராமில் திறந்தார் முதல்வர்

/

தமிழகத்தின் 3வது 'டைடல் பார்க்' பட்டாபிராமில் திறந்தார் முதல்வர்

தமிழகத்தின் 3வது 'டைடல் பார்க்' பட்டாபிராமில் திறந்தார் முதல்வர்

தமிழகத்தின் 3வது 'டைடல் பார்க்' பட்டாபிராமில் திறந்தார் முதல்வர்

1


ADDED : நவ 22, 2024 11:30 PM

Google News

ADDED : நவ 22, 2024 11:30 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில், 330 கோடி ரூபாய் செலவில், 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள, 'டைடல் பார்க்' கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் அதீத வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, 2000ல், பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன், சென்னை தரமணியில், 'டைடல் பார்க்' கட்டடம் கட்டப்பட்டது.

இதேபோல், வட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைத்து, தகவல் வேலை வாய்ப்பை உருவாக்க, பட்டாபிராமில், 11.41 ஏக்கரில், 330 கோடி ரூபாய் செலவில், 5.57 லட்சம் சதுர அடியில், 21 தளங்கள் கொண்ட, அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய, 'டைடல் பார்க்' கட்டப்பட்டுள்ளது.

இதை முதல்வர் ஸ்டாலின், நேற்று திறந்து வைத்தார். இக்கட்டடத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைதொடர்பு வசதிகள், தடையற்ற மின்சாரத்திற்கு உயரழுத்த மும்முனை மின் இணைப்பு என, பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

மொத்தம், 6,000 பேர் பணிபுரியும் வகையில், பசுமை கட்டட விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது.

பட்டாபிராமில் கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் வாயிலாக, தமிழகத்தின் வட பகுதியை சார்ந்த, குறிப்பாக, திருவள்ளூர் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன், அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

டைடல் பார்க் துவக்க விழாவில், அங்கு தொழில் துவங்க, 'வெப்பெராக்ஸ் சொல்யூஷன்ஸ், டாட்நிக்ஸ் டெக்னாலஜீஸ்' ஆகிய நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டு ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.

927 கார்கள், 2,280 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வசதி, அரங்கம், உணவகம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன






      Dinamalar
      Follow us