sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

நாங்கள் பணியமாட்டோம் டிரம்புக்கு சீனா பதிலடி

/

நாங்கள் பணியமாட்டோம் டிரம்புக்கு சீனா பதிலடி

நாங்கள் பணியமாட்டோம் டிரம்புக்கு சீனா பதிலடி

நாங்கள் பணியமாட்டோம் டிரம்புக்கு சீனா பதிலடி


ADDED : ஏப் 10, 2025 11:24 PM

Google News

ADDED : ஏப் 10, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெய்ஜிங்:அமெரிக்காவின் வரி விதிப்பு அடக்குமுறைக்கு பணிந்து பின்வாங்க மாட்டோம் என சீனா அறிவித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்கவும், மற்ற நாடுகளின் இறக்குமதி வரியுடன் சமநிலைப்படுத்தவும் பதிலுக்கு பதில் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் அறிவித்தார். அதன்படி, சீனாவுக்கு இரண்டு முறை தலா 10 சதவீதம் வரி விதித்த டிரம்ப், கடந்த 2ம் தேதி அறிவித்த 60 நாடுகளுக்கான வரிவிதிப்பில், சீனாவுக்கு மேலும் 34 சதவீத வரி விதித்தார்.

இதை ஏற்காமல், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா 34 சதவீத வரி விதித்தது. இதனால், சீனாவுக்கு டிரம்ப் மேலும், 50 சதவீதம் வரி விதித்ததால், மொத்த வரி 104 சதவீதமாக அதிகரித்தது.

ஆனால், அவரது எச்சரிக்கையைக் கண்டு கொள்ளாத சீன அரசு, அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு, பதிலடியாக 50 சதவீத வரி விதித்தது. இதனால், ஏற்கனவே இருந்த 34 சதவீத வரியுடன் சேர்த்து, மொத்த வரி விதிப்பு 84 சதவீதமாக உயர்ந்தது.

இதோடு, ஐரோப்பிய யூனியனும் அமெரிக்க ஸ்டீல் பொருட்களுக்கு வரி விதிப்பை அறிவித்ததால், வேறுவழியின்றி பேச்சு நடத்த ஏதுவாக, 90 நாட்களுக்கு வரிவிதிப்பை நிறுத்தி வைப்பதாக, டிரம்ப் அறிவித்தார்.

எனினும், சீனப் பொருட்கள் இறக்குமதி மீது மேலும் 21 சதவீத வரி விதித்து, மொத்த வரி 125 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். இதற்கு பதில்அளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், நாங்கள் சீனர்கள், அமெரிக்க அதிபரின் மிரட்டலுக்கு பணிந்து பின்வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வரி விதிப்பை 90 நாட்கள் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதால், இந்திய ஏற்று மதியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி, சுமூக தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயலும் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us