sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

சீனாவின் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் மின்னணு பொருட்கள் தயாரிப்பில் தாமதம்

/

சீனாவின் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் மின்னணு பொருட்கள் தயாரிப்பில் தாமதம்

சீனாவின் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் மின்னணு பொருட்கள் தயாரிப்பில் தாமதம்

சீனாவின் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் மின்னணு பொருட்கள் தயாரிப்பில் தாமதம்


ADDED : ஜன 19, 2025 12:13 AM

Google News

ADDED : ஜன 19, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சீனாவின் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளால், நாட்டின் மின்னணு பொருட்கள், சோலார் மற்றும் மின்சார வாகன தயாரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீன முதலீடுகளுக்கு இந்தியா விதித்த கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக, சீனா இதனை மேற்கொள்வதாக, பொருளாதார ஆலோசனை நிறுவனமான ஜி.டி.ஆர்.ஐ., தெரிவித்து உள்ளது.

இது குறித்து ஜி.டி.ஆர்.ஐ., அமைப்பின் நிறுவனர் அஜய் வத்சவா தெரிவித்துள்ளதாவது:

பேட்டரி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தி இருப்பதால், இந்தியாவில் மின்னணு, சோலார் மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தேவையற்ற தாமதத்தையும், இடையூறுகளையும் சந்தித்து வருகின்றன.

சீனாவின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு எதிராக இந்தியா உறுதியாக இருப்பதுடன், உள்நாட்டு உற்பத்தி, வினியோகத் தொடரை அதிகரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

சீனாவின் நடவடிக்கை, தீவிர புவிசார் அரசியல் பதற்றம், வர்த்தகப் போருக்கான அறிகுறியை வெளிப்படுத்துகிறது. இது விரைவில் சீனாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்தியா மீதான கட்டுப்பாடுகள் விரைவில் காணாமல் போகும் என, நம்பிக்கை உள்ளது.

எனவே, இந்தியா மின்னணு பொருட்கள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு, உயர்தர மூலப்பொருட்கள் கொண்ட ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும். இது சீனாவை சார்ந்திருப்பதை குறைப்பதுடன், நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய வினியோகத் தொடரை உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us