sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ரூ.320 கோடி ஆர்டர் பெற்றது கோவை சி.ஆர்.ஐ., பம்ப்

/

ரூ.320 கோடி ஆர்டர் பெற்றது கோவை சி.ஆர்.ஐ., பம்ப்

ரூ.320 கோடி ஆர்டர் பெற்றது கோவை சி.ஆர்.ஐ., பம்ப்

ரூ.320 கோடி ஆர்டர் பெற்றது கோவை சி.ஆர்.ஐ., பம்ப்


ADDED : ஆக 27, 2025 01:07 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மஹாராஷ்டிரா மாநிலத்தில், பி.எம்., குசும் திட்டத்தின் கீழ், 320 கோடி ரூபாய் மதிப்பிலான, சோலார் பம்ப்களுக்கான ஆர்டரை, சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனம் பெற்றுள்ளது.

வேளாண் துறையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க, 'பி.எம். குசும்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மஹாராஷ்டிரா மாநில மின் வினியோக நிறுவனம், 'மாகேல் தியலா சவுர் கிருஷி பம்ப்' திட்டத்தில், 3, 5, 7.5 ஹெச்.பி., திறன் கொண்ட 10,714 ஆப் கிரிட் சோலார் பம்ப்களுக்கு ஒப்பந்தம் கோரியிருந்தது.

இந்த ஆர்டரை, கோவை சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.320 கோடி. சி.ஆர்.ஐ., நிறுவன தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், “இந்திய விவசாயிகளுக்கு துாய்மையான, நம்பகமான, நீடித்த நீர் தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்றார்.

120க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தகம் மேற்கொண்டு வரும் சி.ஆர்.ஐ., நிறுவனம், நாடு முழுதும் 1.81 லட்சம் சோலார் பம்ப் சிஸ்டம்களை நிறுவியுள்ளது.






      Dinamalar
      Follow us