sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

டிசம்பர் சில்லரை விலை பணவீக்கம் நான்கு மாதங்களில் இல்லாத உயர்வு

/

டிசம்பர் சில்லரை விலை பணவீக்கம் நான்கு மாதங்களில் இல்லாத உயர்வு

டிசம்பர் சில்லரை விலை பணவீக்கம் நான்கு மாதங்களில் இல்லாத உயர்வு

டிசம்பர் சில்லரை விலை பணவீக்கம் நான்கு மாதங்களில் இல்லாத உயர்வு


ADDED : ஜன 12, 2024 11:57 PM

Google News

ADDED : ஜன 12, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:கடந்த டிசம்பரில், சில்லரை விலை பணவீக்கம் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு, 5.69 சதவீதமாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான இந்த பணவீக்கம் நவம்பர் 2023ல், 5.55 சதவீதமாகவும், டிசம்பர் 2022ல் 5.72 சதவீதமாகவும் இருந்தது. இது கடந்த ஆகஸ்டில் அதிகபட்சமாக, 6.83 சதவீதமாக இருந்தது.

டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் அதிகரிக்க காய்கறிகள், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்தது முக்கிய காரணமாக அமைந்தது.

காய்கறிகள் பிரிவில் பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் 27.64 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்து அதிகபட்சமாக பருப்பு பொருட்கள் 20.73 சதவீதமும் மசாலாக்கள் 19.69 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இருப்பினும் எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருட்கள் பிரிவில் பணவீக்கம் 14.96 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி சில்லரை விலை பணவீக்கத்தை இரண்டு சதவீதத்திலிருந்து ஆறு சதவீதம் வரை வைத்திருக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த வகையில் டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்குக்குள் பராமரிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் துறை உற்பத்தி


நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு, நவம்பரில், 2.40 சதவீதமாக குறைந்துள்ளது என, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தயாரிப்புத் துறை, சுரங்கம் மற்றும் மின்சாரத்துறையின் உற்பத்தி சரிவே இதற்கு முக்கிய காரணம்.

இதுகுறித்து, தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துஉள்ளதாவது:

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, நவம்பர் மாதத்தில் 2.40 சதவீதமாக குறைந்துள்ளது. இது எட்டு மாதங்களில் மிக குறைந்த அளவாகும், மேலும், இது பொருளாதார வல்லுனர்களின் எதிர்பார்ப்பு அளவான, 3.50 சதவீதத்துக்கும் கீழே உள்ளது.

இது கடந்தாண்டு நவம்பரில், 7.60 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய மாதமான அக்டோபரில், 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு, 11.70 சதவீதமாக அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 6.40 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.60 சதவீதமாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, தயாரிப்பு துறையால் சரிந்தது. இத்துறை அக்டோபரில் 10.20 சதவீத உயர்வை பதிவு செய்து இருந்த நிலையில், நவம்பரில் இத்துறையின் உற்பத்தி வெறும் 1.20 சதவீதமாக மட்டுமே அதிகரித்தது.

பண்டிகைகள் காரணமாக, நவம்பர் மாதத்தில் இருந்த விடுமுறைகளால், வேலை நேரம் குறைந்தது. அதன் விளைவாக உற்பத்தியும் குறைந்துள்ளது.

இதேபோல், மின்சாரத்துறை உற்பத்தி, 12.70 சதவீதத்தில் இருந்து 5.80 சதவீதத்துக்கும், சுரங்கத்துறை உற்பத்தி, 9.70 சதவீதத்தில் இருந்து 6.80 சதவீதத்துக்கும் குறைந்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துஉள்ளது.






      Dinamalar
      Follow us