ADDED : செப் 24, 2024 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : நம் நாட்டில் வீடுகளுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதாக, ரியல் எஸ்டேட் நிறுவனங் களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் பேசிய கிரெடாய் தலைவர் மனோஜ் கவுர் கூறுகையில், 'குறிப்பிட்ட சில காலாண்டுகளில் குறைவான எண்ணிக்கையிலான புதிய வீடுகளே அறிமுகப்படுத்தப்படுவதால், வீடுகளின் விற்பனை குறைவதுபோல் தோன்றலாம் என்றும்; மற்றபடி, கொரோனாவுக்கு பின் அதிகரிக்கத் துவங்கிய வீடுகளின் தேவை சற்றும் குறையாமல் வலுவாகவே உள்ளது' என்றார்.
நடப்பு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நாட்டின் முக்கிய ஒன்பது நகரங்களின் வீடு விற்பனை 18 சதவீதம் சரிந்து 1.04 லட்சமாக இருந்தது.