sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பொதுத்துறை நிறுவனத்துக்கு சப்ளை துவக்கத்தில் சிரமம்; பிறகு பலன்

/

பொதுத்துறை நிறுவனத்துக்கு சப்ளை துவக்கத்தில் சிரமம்; பிறகு பலன்

பொதுத்துறை நிறுவனத்துக்கு சப்ளை துவக்கத்தில் சிரமம்; பிறகு பலன்

பொதுத்துறை நிறுவனத்துக்கு சப்ளை துவக்கத்தில் சிரமம்; பிறகு பலன்


ADDED : டிச 19, 2024 11:48 PM

Google News

ADDED : டிச 19, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை முதல் முறையாக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்கும் போது சிரமம் இருக்கும்.

''அதை அனுபவமாக கருதி தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் மூன்று - நான்கு ஆண்டுகளில் அதிக பலன் கிடைக்கும்,'' என, கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிரிஷ் பாண்டியன் தெரிவித்தார்.

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் சார்பில், சென்னை கிண்டியில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், 'ரயில்வே, இஸ்ரோ, இந்தியன் ஆயில், மெட்ரோ ரயில்வே' உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளும், 250க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கிரிஷ் பாண்டியன் மேலும் கூறியதாவது:

ஒரு பொதுத்துறை நிறுவனத்துக்கு பொருட்களை சப்ளை செய்வதன் வாயிலாக, பல நிறுவனங்களின் ஆர்டர் கிடைக்கும்.

உதாரணமாக, ராணுவ துறையின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனத்துக்கு சிறந்த முறையில் பொருட்களை விற்பதன் வாயிலாக, அந்த துறையில் உள்ள 28 நிறுவனங்களுக்கு பொருட்களை விற்கும் வாய்ப்பு கிடைக்கும். 5 - 10 ஆண்டுகளில், சிறு நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சியடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us