sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

60 தொழிற்பேட்டையில் 1,520 மனைகள் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்

/

60 தொழிற்பேட்டையில் 1,520 மனைகள் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்

60 தொழிற்பேட்டையில் 1,520 மனைகள் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்

60 தொழிற்பேட்டையில் 1,520 மனைகள் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 27, 2025 12:19 PM

ADDED : ஜூன் 27, 2025 01:32 AM

Google News

UPDATED : ஜூன் 27, 2025 12:19 PM ADDED : ஜூன் 27, 2025 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சேலம் வெள்ளி கொலுசு தொழிலுக்கான அடுக்குமாடி தொழிற்கூடத்தை உள்ளடக்கிய, மொத்தம் 60 தொழிற்பேட்டைகளில் உள்ள, 1,520 மனைகளை சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு ஒதுக்கும் பணியில், 'சிட்கோ' ஈடுபட்டுள்ளது.

சேலத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவதற்காக, 102 தொழில் அலகுகளுடன் கூடிய அடுக்குமாடி தொழிற்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், காஞ்சிபுரம் வையாவூர், திருவள்ளூர் காவேரிராஜபுரம், துாத்துக்குடி லிங்கம்பட்டி, திருவாரூர் வண்டாம்பாளையில் புதிய தொழிற்பேட்டைகளை சிட்கோ அமைத்து உள்ளது.

இந்த புதிய தொழிற்பேட்டைகளில் உள்ள மனைகள் மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்பேட்டைகளில் இருக்கும் காலி மனைகள் என, மொத்தம், 60 தொழிற்பேட்டைகளில் உள்ள, 1,520 மனைகளை தற்போது தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யும் பணியில், சிட்கோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மனையைப் பெற விண்ணப்பிக்கும் விபரங்களை, சிட்கோவின், 'www.tansidco.tn.gov.in' இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்பவரிடம் நேர்காணல் நடத்தி, மனைகள் ஒதுக்கப்படும்.





ஒரே மனைக்கு அதிகம் போட்டி இருந்தால், விண்ணப்பதாரர் முன்னிலையில் குலுக்கல் நடத்தி ஒதுக்கப்படும். அடுத்த மாதம் 22ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us