அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் ரூ.4,192 கோடி முதலீடு
அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் ரூ.4,192 கோடி முதலீடு
ADDED : ஜூன் 22, 2025 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய பங்கு முதலீட்டாளர்களின் முதலீடு, கடந்த வாரம் 1,209 கோடி ரூபாயாக இருந்தது. இதையடுத்து, ஜூன் மாதத்தில் நிகர வெளியேற்றம் 4,192 கோடி ரூபாயாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 16 முதல் 20 தேதி வரையிலான காலகட்டத்தில், இந்திய பங்கு சந்தையில் அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் 1,209 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தனர். இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், நிகர முதலீடுகள் குறைந்துள்ளதாக என்.எஸ்.டி.எல்., தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடுகள் அதிகரித்துஇருந்தன.