ரூ.7,300 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
ரூ.7,300 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
ADDED : பிப் 10, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:அன்னிய முதலீட்டாளர்கள் பங்கு முதலீடுகளை திரும்பப் பெறுவது, பிப்ரவரி மாதத்திலும் தொடருகிறது.
கடந்த ஜனவரியில் 78,027 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளில் இருந்து, தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்ற நிலையில், இம்மாதம் 7ம் தேதி வரையிலான முதல் வாரத்தில் 7,300 கோடி ரூபாய்க்கு மேல் பங்கு முதலீட்டை திரும்ப பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் வரி விதிப்பு, டாலரின் மதிப்பு அதிகரிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களே, அன்னிய பங்கு முதலீட்டாளர்கள், முதலீட்டை திரும்ப பெற காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.