sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தங்க பத்திர முதலீடு 109 சதவிகிதம் லாபம்

/

தங்க பத்திர முதலீடு 109 சதவிகிதம் லாபம்

தங்க பத்திர முதலீடு 109 சதவிகிதம் லாபம்

தங்க பத்திர முதலீடு 109 சதவிகிதம் லாபம்


ADDED : ஏப் 27, 2025 11:59 PM

Google News

ADDED : ஏப் 27, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:ரிசர்வ் வங்கியால் கடந்த 2020 -- 21ம் நிதியாண்டில், வெளியிடப்பட்ட முதல்கட்ட தங்கப்பத்திர கணக்கை முன்கூட்டியே முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு, யூனிட் ஒன்றுக்கு 9,600 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தங்கப்பத்திரங்கள் வெளியிடப்பட்ட ஆண்டில் இருந்து, பொதுவாக எட்டு ஆண்டுகளில் முதிர்வடையும். எனினும், ஐந்து ஆண்டு களுக்கு பிறகு முதலீட்டை திரும்ப பெற அனுமதிக்கப்படும். கடந்த 2020ம் ஆண்டு ஏப்., 28ம் தேதி முதல்கட்ட தங்கப்பத்திரம் வெளியிடப்பட்டது.

இதை ஐந்து ஆண்டுகளில் முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு, கடந்த ஏப்., 23, 24 மற்றும் 25ம் தேதி விலை அடிப்படையில், கிராமுக்கு 9,600 ரூபாய் என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. தங்கப்பத்திரம் வெளியிடப்பட்ட போது யூனிட் விலை 4,589 ரூபாயாக இருந்தது.

தற்போது நிர்ணயித்த 9,600 ரூபாயோடு ஒப்பிடுகையில், கிராம் ஒன்றுக்கு 5,011 ரூபாய் லாபமாக கிடைத்துள்ளது. இது, 109 சதவீதம் அதிகமாகும்.

முன்னதாக, இந்த வாரத்தின் துவக்கத்தில், 2017 -- 18ம் ஆண்டுக்கான நான்காம் கட்ட தங்கப் பத்திரம், 2018- - 19ம் ஆண்டுக்கான இரண்டாம் கட்ட தங்கப்பத்திர கணக்குகள் முன்கூட்டியே முடிக்க தகுதி பெற்றவை என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us