sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி 22 திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

/

 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி 22 திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி 22 திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

 மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி 22 திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்


UPDATED : ஜன 03, 2026 04:32 AM

ADDED : ஜன 03, 2026 03:05 AM

Google News

UPDATED : ஜன 03, 2026 04:32 AM ADDED : ஜன 03, 2026 03:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மின்னணு பொருட்களின் உதிரிபாக உற்பத்தி திட்டத்தின்கீழ், 22 புதிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. டில்லியில் ஒப்புதல் கடிதங்களை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வழங்கினார்.

இதுகுறித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளதாவது:



இ.சி.எம்.எஸ்., எனும் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தின்கீழ், பல விண்ணப்பங்களை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பெற்றது.

இவற்றில் 22 நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 12,704 கோடி ரூபாய் முதலீட்டிலான 24 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Image 1516546


இந்நிலையில், அடுத்த கட்ட விண்ணப்பங்களுக்கும் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், மொபைல் உற்பத்தி, தொலைத்தொடர்பு, நுகர்வோர் மின்னணு பொருட்கள், வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப ஹார்டுவேர் ஆகிய பல்வேறு துறைகளுக்கு முதலீடுகள் பகிரப்பட்டுள்ளன.

உள்நாட்டு வினியோக கட்டமைப்பை பலப்படுத்துவது, முக்கிய மின்னணு பொருட்களின் உதிரிபாகங்களுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதை தவிர்ப்பது ஆகியவற்றுக்காக தற்போதைய முதலீட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முதலிடம்

இதனிடையே, 'மத்திய அரசின் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ், முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் மீண்டும் முதலிடம் வகிப்பதாக தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

மொத்தம், 41,863 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளில், டாடா எலக்ட்ரானிக்ஸ், மதர்சன், பாக்ஸ்கான் வாயிலாக, தமிழகத்தில், 27,166 கோடி ரூபாய், முதலீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அவை, தமிழகத்தில், 23,451 வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

ஒப்புதல் பெற்ற முக்கிய நிறுவனங்கள்
*டிக்ஸான் *சாம்சங் டிஸ்பிளே நொய்டா

*பாக்ஸ்கான் (யூசான் டெக்னாலஜி இந்தியா)
*ஹிண்டால்கோ
மொத்த முதலீடு: ரூ. 41,863 கோடி
உதிரிபாக உற்பத்தி மதிப்பு: ரூ. 2,58,152 கோடி
நேரடி வேலைவாய்ப்புகள்: 33,791
பயன் அடையும் துறைகள்:

*மொபைல் உற்பத்தி
*தொலைத்தொடர்பு
*நுகர்வோர் மின்னணு பொருட்கள்
*வாகன உற்பத்தி
*தகவல் தொழில்நுட்ப ஹார்டுவேர்

திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
*உள்நாட்டு விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துதல்
*முக்கிய மின்னணு உதிரிபாகங்களில் இறக்குமதி சார்பை குறைத்தல்
*இந்தியாவின் உயர்மதிப்புள்ள உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்

எந்த மாநிலங்களில் முதலீடு?
தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா உத்தர பிரதேசம் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஹரியானா மகாராஷ்டிரா








      Dinamalar
      Follow us