sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பழைய பொருட்கள் விற்பனை ரூ.800 கோடி ஈட்டியது அரசு 'சந்திரயான் - 3' திட்ட செலவை விட அதிகம்

/

பழைய பொருட்கள் விற்பனை ரூ.800 கோடி ஈட்டியது அரசு 'சந்திரயான் - 3' திட்ட செலவை விட அதிகம்

பழைய பொருட்கள் விற்பனை ரூ.800 கோடி ஈட்டியது அரசு 'சந்திரயான் - 3' திட்ட செலவை விட அதிகம்

பழைய பொருட்கள் விற்பனை ரூ.800 கோடி ஈட்டியது அரசு 'சந்திரயான் - 3' திட்ட செலவை விட அதிகம்


ADDED : நவ 10, 2025 12:48 AM

Google News

ADDED : நவ 10, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த அக்டோபரில் -மத்திய அரசு அலுவலகங்களில் சேகரித்த பழைய பொருட்கள் விற்பனை வாயிலாக, 800 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இது, 'சந்திரயான் - -3' திட்டச் செலவான 615 கோடி ரூபாயை விட அதிகம்.

அரசு அலுவலகங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் துாய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, அதில் கிடைக்கும் பழைய பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.

அந்த வகையில், கடந்த அக்டோபரில் நாடு முழுதும், 11.58 லட்சம் அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் நடந்தது. அப்போது, 29 லட்சம் பழைய கோப்புகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.

கடந்த 2021 முதல் இந்தாண்டு வரை, 23.62 லட்சம் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட துாய்மை இயக்கத்தின் வாயிலாக 166.96 லட்சம் கோப்புகள் கண்டறியப்பட்டு, அவை தேவைக்கேற்றபடி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பின் அழிக்கப்பட்டன. அப்போது சேகரிக்கப்பட்ட பழைய பொருட்கள் விற்பனை வாயிலாக, மத்திய அரசு 4,097.24 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.






      Dinamalar
      Follow us