sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ரூ. 2.37 லட்சம் கோடி உச்சம் தொட்ட ஜி.எஸ்.டி.,

/

ரூ. 2.37 லட்சம் கோடி உச்சம் தொட்ட ஜி.எஸ்.டி.,

ரூ. 2.37 லட்சம் கோடி உச்சம் தொட்ட ஜி.எஸ்.டி.,

ரூ. 2.37 லட்சம் கோடி உச்சம் தொட்ட ஜி.எஸ்.டி.,


ADDED : மே 02, 2025 12:19 AM

Google News

ADDED : மே 02, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஜி.எஸ்.டி., வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில், இதுவரை இல்லாத அளவில், 2.37 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 2017ல், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப் பட்டதில் இருந்து, இதுவே ஒரு மாதத்தின் அதிகபட்ச வரி வசூலாகும்.

இதற்கு முன்னதாக, கடந்தாண்டு ஏப்ரலில் 2.10 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. கடந்த மார்ச் வசூல் 1.96 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த ஏப்ரலை பொறுத்தவரை, உள்நாட்டு பரிவர்த்தனைகளிலிருந்து கிட்டத்தட்ட 1.90 லட்சம் கோடி ரூபாயும்; இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து 46,913 கோடி ரூபாயும் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டுள்ளது. 27,341 கோடி ரூபாய்க்கு ரீபண்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ரீபண்டுகளை கழித்த பின், நிகர ஜி.எஸ்.டி., வசூல் 9.10 சதவீதம் அதிகரித்து, 2.09 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரலில் தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வருவாய் 13 சதவீதம் அதிகரித்து, 13,831 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஜி.எஸ்.டி., வருவாய் 11 சதவீதம் அதிகரித்து, 11.78 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.






      Dinamalar
      Follow us