sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஆப்பிள் சி.ஓ.ஓ., ஆனார் இந்தியர்

/

ஆப்பிள் சி.ஓ.ஓ., ஆனார் இந்தியர்

ஆப்பிள் சி.ஓ.ஓ., ஆனார் இந்தியர்

ஆப்பிள் சி.ஓ.ஓ., ஆனார் இந்தியர்


ADDED : ஜூலை 09, 2025 10:44 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக, இந்தியரான சபி கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வரும், 58 வயதான சபி கான், தற்போது அந்நிறுவனத்தின் இயக்கத்துக்கான துணைத் தலைவராக உள்ளார்.

தலைமை இயக்க அதிகாரியாக தற்போது ஜெப் வில்லியம்ஸ் பணியாற்றும் நிலையில், அவரது பொறுப்பை சபி கான் இந்த மாத இறுதிக்குள் ஏற்க உள்ளதாக, ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

உத்தர பிரதேசத்தின் மொராதாபாதில் 1966ல் பிறந்த சபி கான், தன் பள்ளிப் படிப்புக்காக சிங்கப்பூர் சென்ற நிலையில், பின்னர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார்.

அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக, ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச வினியோக தொடர், திட்டமிடல், கொள்முதல், தயாரிப்பு, போக்குவரத்து ஆகிய பிரிவுகளை கவனித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us