sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

டிஜிட்டல் கரன்சி மேம்பாட்டில் தீவிரம்: நிர்மலா சீதாராமன்

/

டிஜிட்டல் கரன்சி மேம்பாட்டில் தீவிரம்: நிர்மலா சீதாராமன்

டிஜிட்டல் கரன்சி மேம்பாட்டில் தீவிரம்: நிர்மலா சீதாராமன்

டிஜிட்டல் கரன்சி மேம்பாட்டில் தீவிரம்: நிர்மலா சீதாராமன்


ADDED : ஜன 26, 2024 02:29 AM

Google News

ADDED : ஜன 26, 2024 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டிஜிட்டல் கரன்சியை மேம்படுத்துவதில், மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய பேமண்டுகளுக்கு டிஜிட்டல் கரன்சி உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சோதனை அடிப்படையில் மொத்த விற்பனைப் பிரிவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தை செயல்படுத்த ஒன்பது வங்கிகளையும் ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுத்தது.

மேலும் அதே ஆண்டின் டிசம்பர் மாதம், சில்லறை விற்பனை பிரிவிலும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது , எல்லை தாண்டிய பேமண்டுகளுக்கு டிஜிட்டல் கரன்சி உதவும் என்று உறுதியாக நம்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், டிஜிட்டல் கரன்சி குறைந்த செலவில் பணம் செலுத்துவதை விரைவுபடுத்த உதவுவதாகவும், பணம் அனுப்பும் மற்றும் பெறும் செலவைக் குறைப்பதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக டிஜிட்டல் கரன்சியை மேம்படுத்துவதில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us