ஏப்ரல் மாதத்தில் கார் விற்பனை முன்னணி நிறுவனங்கள் சறுக்கல்
ஏப்ரல் மாதத்தில் கார் விற்பனை முன்னணி நிறுவனங்கள் சறுக்கல்
ADDED : மே 01, 2025 11:30 PM

சென்னை:நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான கடந்த ஏப்ரலில், பயணியர் கார் விற்பனை 3.93 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஏப்ரலில் 3.22 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஏப்ரலில் 3.34 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதி நிறுவனத்தின் மொத்த விற்பனை உயர்ந்து இருந்தாலும், உள்நாட்டு விற்பனையில் பெரிய முன்னேற்றம் இல்லை. ஏற்றுமதி 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி மீண்டும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது மஹிந்திரா நிறுவனம். ஹூண்டாய், டாடா நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளன. டாடா நிறுவனத்தின் ஏற்றுமதி 233 சதவீதம் உயர்ந்து, 100 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் உள்நாட்டில் 90 லட்சம் கார்களை விற்பனை செய்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் ஏற்றுமதியும் 21 சதவீதம் உயர்ந்துள்ளது.