sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

சென்னையில் தொழிற்சாலை அமைக்கிறது முராட்டா

/

சென்னையில் தொழிற்சாலை அமைக்கிறது முராட்டா

சென்னையில் தொழிற்சாலை அமைக்கிறது முராட்டா

சென்னையில் தொழிற்சாலை அமைக்கிறது முராட்டா


ADDED : பிப் 19, 2025 11:58 PM

Google News

ADDED : பிப் 19, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில் ஆலை அமைக்க முன்னணி ஐபோன் உபகரணங்கள் தயாரிப்பாளரான ஜப்பானைச் சேர்ந்த முராட்டா மேனுபேக்சரிங் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

ஜப்பானின் கியோட்டோவை தலைமையிடமாக கொண்ட முராட்டா நிறுவனம், ஸ்மார்ட்போன், சர்வர் மற்றும் கேமிங் கன்சோல்களில் பயன்படுத்தப்படும் மல்டிலேயர் செராமிக் கெபாசிட்டர் உள்ளிட்டவை தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், சாம்சங் ஸ்மார்ட்போன் துவங்கி, என்விடியா நிறுவனத்தின் சர்வர்கள், சோனி நிறுவனத்தின் கேமிங் கன்சோல் வரை பயன்படுத்தப்படுகின்றன.

ஏற்கனவே, அமெரிக்கா - - சீனா இடையே நிலவும் முரண்பாடுகளால், சீனாவில் இருந்து ஐபோன் தயாரிப்புகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மாற்றி உள்ளது. சென்னையில் ஐபோன் தயாரிப்பு ஒப்பந்த நிறுவனமான பாக்ஸ்கான், ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இதன்படி, சென்னையில் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் ஆலையை முராட்டா நிறுவனம் அமைக்க இருப்பதாகவும்; வரும் 2026 ஏப்ரல் முதல் இந்த ஆலை செயல்பட துவங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us