sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தமிழகத்தில் ரூ.9.37 லட்சம் கோடி கடன் வழங்க வாய்ப்பு: நபார்டு

/

தமிழகத்தில் ரூ.9.37 லட்சம் கோடி கடன் வழங்க வாய்ப்பு: நபார்டு

தமிழகத்தில் ரூ.9.37 லட்சம் கோடி கடன் வழங்க வாய்ப்பு: நபார்டு

தமிழகத்தில் ரூ.9.37 லட்சம் கோடி கடன் வழங்க வாய்ப்பு: நபார்டு


ADDED : பிப் 05, 2025 11:33 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''தமிழகத்தில் வரும், 2025 - 26ம் நிதியாண்டில், விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்களை உள்ளடக்கிய முன்னுரிமை துறைகளில், 9.37 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன்களை வழங்குவதற்கு வாய்ப்புள்ளது,'' என, நபார்டு வங்கியின் தமிழக முதன்மை பொது மேலாளர் ஆனந்த் தெரிவித்தார்.

'நபார்டு' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி சார்பில், மாநில கடன் கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.

இதில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் முருகானந்தம், நிதி துறை செயலர் உதயச்சந்திரன், கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் ஆனந்த் ஆகியோர், 'வளம் சார்ந்த மாநில அறிக்கை 2025 - 26'ஐ வெளியிட்டனர்.

நபார்டு பொது மேலாளர் ஆனந்த் பேசியதாவது:

தமிழகத்தில் விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்களை உள்ளடக்கிய முன்னுரிமை துறைகளில், 2025 - 26ல், 9.37 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க வாய்ப்புள்ளது. இது, நடப்பு நிதியாண்டிற்கான கடன் வாய்ப்பை விட, 12.41 சதவீதம் அதிகம்.

வரும் நிதியாண்டில் முன்னுரிமை துறைகளில், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறையில், 4.34 லட்சம் கோடி ரூபாயும்; சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில், 3.45 லட்சம் கோடி ரூபாயும்; கல்வி உள்ளிட்ட இதர துறைகளில், 1.58 லட்சம் கோடி ரூபாயும் கடன் வழங்க வாய்ப்பு உள்ளது.

வளம் சார்ந்த அறிக்கையில் தமிழக அரசு, என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தங்கம் தென்னரசு, நிதி அமைச்சர்

முறையில் கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.



கடன் வழங்க வாய்ப்புள்ள துறைகள்

(2025 - -26 நிதியாண்டு) வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறை: ரூ.4.34 லட்சம் கோடி  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை: ரூ.3.45 லட்சம் கோடி  கல்வி உள்ளிட்ட இதர துறைகள்: ரூ.1.58 லட்சம் கோடி கடன் வழங்க வாய்ப்புள்ளது








      Dinamalar
      Follow us