ADDED : ஜூலை 03, 2025 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதக் கட்டணம் வசூலிக்கப்படாது என,  பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக வங்கி தெரிவித்து உள்ளது. அனைவருக்கும் நிதிச்சேவை மற்றும் நுகர்வோருக்கு அதிகாரமளிப்பதை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே மற்றொரு பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, கடந்த மாதம் முதல் இதை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

