என்.எஸ்.இ., - ஐ.பி.ஓ., விவகாரம் செபி தலைவரின் விளக்கம் 8 ஆண்டுகளாக முடங்கிய விண்ணப்பம்
என்.எஸ்.இ., - ஐ.பி.ஓ., விவகாரம் செபி தலைவரின் விளக்கம் 8 ஆண்டுகளாக முடங்கிய விண்ணப்பம்
ADDED : ஏப் 18, 2025 12:16 AM

புதுடில்லி:தேசிய பங்குச் சந்தை புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதாக அறிவித்து, எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னும் அதன் முயற்சி கைகூடவில்லை. செபி அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல் இன்னும் நீடிக்கிறது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து செபியின் தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளதாவது:
பொதுமக்களின் நலன்களை, வணிக நலன்கள் விஞ்சுவதை ஒருபோதும் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதிக்காது. பொதுமக்களின் நலன் சமரசம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வது ஒழுங்குமுறை ஆணையத்தின் பொறுப்பாகும்.
என்.எஸ்.சி.,யின் ஐ.பி.ஓ., திட்டங்கள் 8 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கியுள்ளன. இதுகுறித்து ஆராய செபி குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், இது சம்பந்தமான அனைத்து சிக்கல்களையும் தீர்க்குமாறு, என்.எஸ்.சி.,யிடம் செபி கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செபி தயக்கம் ஏன்?
* சில தரகர்களுக்கு முன்னுரிமை தந்ததால் எழுந்த, 'கோ-லொகேஷன்' ஊழல் புகார்
* பலமுறை வர்த்தகத்தை முடக்கிய தொழில்நுட்ப கோளாறு சம்பவங்கள்
* நிலுவையில் உள்ள சட்டரீதியான வழக்குகள்

