ADDED : டிச 02, 2024 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நவம்பரில் நாட்டின் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்துள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
பெட்ரோல் விற்பனை, கடந்த ஆண்டு நவம்பரில் 28.6 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில், கடந்த நவம்பரில் 8.30 சதவீதம் அதிகரித்து 31 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. டீசல் விற்பனையும் 5.90 சத வீதம் அதிகரித்து 72 லட்சம் டன்னாக இருந்தது. மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த அக்டோபரில் பெட்ரோல் விற்பனை 29.6 லட்சம் டன்னாக இருந்த நிலையில், நவம்பரில் விற்பனை 4.7 சதவீதம் அதிகரித்துஉள்ளது.
டீசல் விற்பனையும் கடந்த அக்டோபரில் 65 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில், நவம்பரில் 11 சதவீதம் விற்பனை அதிகரித்திருந்தது. கடந்த சில மாதங்களாக டீசல் விற்பனை குறைந்திருந்த நிலையில், வளர்ச்சி கண்ட முதல் மாதமாக நவம்பர் மாறியுள்ளது.