ADDED : பிப் 07, 2025 11:10 PM

வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் நன்மைகளை பெற, பி.எப்., கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம், பிப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 2024 மத்திய பட்ஜெட்டில், வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இ.எல்.ஐ., திட்டம் அறிவிக்கப் பட்டது. இத்திட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் நிறுவனம், பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் நன்மைகளை பெற, யு.ஏ.என் எனப்படும் பிரத்யேக கணக்கு எண்ணுடன், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கை இணைப்பது கட்டாயம். இதற்கான அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது பிப்., 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தகரத்தின் விலை
மேலும் அதிகரிக்க வாய்ப்பு
உலகளவில் தகரத்துக்கான தேவை அதிகரித்து வருவதுடன், வினியோக நெருக்கடி காரணமாக, அதன் விலை மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் காணாத அளவுக்கு கடந்த மாதம் தகரத்தின் விலை அதிகரித்த நிலையில், புதிய சுரங்க உரிமம், புத்தாண்டால் உற்பத்தி தாமதம் காரணமாக, இந்தோனேஷிய ஏற்றுமதி கணிசமாக குறைந்து உள்ளது.
மேலும், சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, தகரத்தை உருக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் நீண்ட விடுமுறையில் சென்றதால் உற்பத்தி தாமதமாகக் கூடும். இதனால் ஏற்படும் வினியோக நெருக்கடி காரணமாக, தகரம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகரத்துக் கான சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.