sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் 'சிப்காட்' உதவியில் அமைக்க திட்டம்

/

துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் 'சிப்காட்' உதவியில் அமைக்க திட்டம்

துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் 'சிப்காட்' உதவியில் அமைக்க திட்டம்

துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் 'சிப்காட்' உதவியில் அமைக்க திட்டம்

2


UPDATED : ஆக 23, 2025 10:19 PM

ADDED : ஆக 23, 2025 10:14 PM

Google News

UPDATED : ஆக 23, 2025 10:19 PM ADDED : ஆக 23, 2025 10:14 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் கப்பல் கட்டும் துறையில் முதலீட்டை ஈர்ப்பதுடன், புதிய வேலைவாய்ப்பை உருவாக்க, துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்தை, 'சிப்காட்' நிறுவனம் வாயிலாக அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முன்னணி பொது அல்லது தனியார் துறையை சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது. நம்நாட்டில் ஆந்திராவில் விசாகப்பட்டினம், கேரளாவில் கொச்சி, மஹாராஷ்டிராவில் மும்பை, மேற்கு வங்கத்தில் கொல்கட்டா ஆகிய இடங்களில், பெரியளவில் கப்பல் கட்டும் தளங்கள் உள்ளன.

இதையடுத்து, தமிழகத்திலும் கப்பல் கட்டும் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது.

இதற்காக, துாத்துக்குடியில், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் வாயிலாக, கப்பல் கட்டும் தளத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 இந்தியாவின் கப்பல் கட்டும் துறையின் சந்தை மதிப்பு : ரூ. 9,200 கோடி

 உலகளாவிய கப்பல் கட்டும் சந்தையின் மதிப்பு ரூ.13 லட்சம் கோடி

 உலகளவில் கப்பல் கட்டும் சந்தையில் நாட்டின் பங்கு, 2 சதவீதத்துக்கும் குறைவு

 சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கப்பல் கட்டும் தொழிலில் முன்னணி.

30,000 வேலைவாய்ப்பு உருவாகும்

தமிழக தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக மாற்றிட, 30,000 வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தமிழக கடல் போக்குவரத்து கொள்கையை அரசு வெளியிட உள்ளது. இது, கப்பல், படகு வடிவமைப்பு, கப்பல் உருவாக்கம், கப்பல் இயந்திர உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் இருக்கும். ஊக்குவிப்பு சலுகைகள் உடன், கொள்கையை வழிகாட்டி நிறுவனம் தயாரிக்கும். துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தனி கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us