sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆராய்ச்சி மையம்: ராஜா

/

இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆராய்ச்சி மையம்: ராஜா

இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆராய்ச்சி மையம்: ராஜா

இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆராய்ச்சி மையம்: ராஜா


ADDED : ஏப் 15, 2025 10:51 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'சென்னையில் உள்ளதைப் போல் மற்ற இடங்களிலும், 'ஆர் அண்டு டி' மையங்கள் அமைய உள்ளன. இது, இரண்டாம் நிலை நகரங்களின் வலிமையை காட்டுவதாக அமையும்' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

திருச்சியில், 'ஜாபில்' நிறுவனம் முதலீடு செய்துள்ளது. தற்போது உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மற்றும், 'டீப் டெக்' எனும் ஆழ்தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள தைவான் நாட்டை சேர்ந்த, 'புல் செயின்' நிறுவனம், திருச்சியில் வடிவமைப்பு அலுவலகத்தை திறந்துள்ளது.

அடுத்து, அண்ணா பல்கலை திருச்சி வளாகத்தில், உலகளாவிய, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையால், மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியும் வளர்ச்சி கண்டு வருகிறது. சென்னையைப் போல் மற்ற இடங்களிலும் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைய உள்ளன.

இது, மகிழ்ச்சி அளிப்பதுடன், திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களின் வலிமையை காட்டுவதாகவும் உள்ளது. இதை, வேறு எந்த மாநிலமும் வழங்க முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us