sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

வியட்நாமிலிருந்து இந்தியாவுக்கு மாற 'சாம்சங்' பரிசீலனை

/

வியட்நாமிலிருந்து இந்தியாவுக்கு மாற 'சாம்சங்' பரிசீலனை

வியட்நாமிலிருந்து இந்தியாவுக்கு மாற 'சாம்சங்' பரிசீலனை

வியட்நாமிலிருந்து இந்தியாவுக்கு மாற 'சாம்சங்' பரிசீலனை


ADDED : ஏப் 24, 2025 11:57 PM

Google News

ADDED : ஏப் 24, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க, வியட்நாமில் இருந்து உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் பரிசீலித்து வருகிறது. அத்துடன், ஸ்மார்ட் போன்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு, இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2020--21ம் நிதியாண்டில் துவங்கப்பட்ட ஸ்மார்ட் போன்களுக்கான பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகள் வரை நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன்படி, சாம்சங் நிறுவனத்துக்கான அவகாசம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவுஅடைந்தது.

உற்பத்தி இலக்கை எட்டாததால், இரண்டாவது ஆண்டில் சாம்சங் ஊக்கத்தொகையை பெறவில்லை. எனவே, தவறவிட்ட ஓராண்டுக்கு பதிலாக, தற்போது பி.எல்.ஐ., திட்டத்தை ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில், பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ், சாம்சங் நிறுவனம் 3,200 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us