sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'ரூ.5 கோடி வரை எஸ்.எம்.இ., கடன் சில நிமிடங்களில் பெற முடியும்'

/

'ரூ.5 கோடி வரை எஸ்.எம்.இ., கடன் சில நிமிடங்களில் பெற முடியும்'

'ரூ.5 கோடி வரை எஸ்.எம்.இ., கடன் சில நிமிடங்களில் பெற முடியும்'

'ரூ.5 கோடி வரை எஸ்.எம்.இ., கடன் சில நிமிடங்களில் பெற முடியும்'


ADDED : அக் 09, 2025 01:39 AM

Google News

ADDED : அக் 09, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:இந்தியாவின் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றத்தால், தரவுகளை பயன்படுத்தி கடன் பெறுவதற்கான தகுதியை கண்டறிய முடியும் என்பதால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சில நிமிடங்களில் கடன் பெற முடியும் என எஸ்.பி.ஐ., தலைவர் சி.எஸ்.ஷெட்டி தெரிவித்துள்ளார்

மும்பையில் நடைபெற்ற குளோபல் பின்டெக் விழாவில் பங்கேற்ற அவர் தெரிவித்துள்ளதாவது:

சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர், கடன் தேவைப்படும் பட்சத்தில், 5 கோடி ரூபாய் வரை, 25 முதல் 26 நிமிடங்களில் இப்போது ஒப்புதல் பெற முடியும் என்பதை பெருமையுடன் கூறுகிறேன்.

நாம் உருவாக்கி உள்ள டிஜிட்டல் கட்டமைப்புகளால் இது சாத்தியமாகி உள்ளது.

காப்பீடு போன்ற நிதிச்சேவைகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வந்த போதிலும், தொழில் வாயிலாக கடன் வினியோகத்தை மேம்படுத்த வேண்டும். டிஜிட்டல் தளங்கள் மற்றும் பின் டெக் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு விரைவான, நம்பகமான கடன் முடிவுகளை உறுதி செய்ய முடியும்.

இதற்காக எஸ்.பி.ஐ., தற்போது யு.பி.ஐ., ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரி தாக்கல், கணக்கு அறிக்கை உள்ளிட்ட விரிவான தரவுகளை பயன்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us