sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'சோலார் எனர்ஜி தலைவர் டிஸ்மிஸ் அதானி நிறுவன ஊழலை மறைக்காது'

/

'சோலார் எனர்ஜி தலைவர் டிஸ்மிஸ் அதானி நிறுவன ஊழலை மறைக்காது'

'சோலார் எனர்ஜி தலைவர் டிஸ்மிஸ் அதானி நிறுவன ஊழலை மறைக்காது'

'சோலார் எனர்ஜி தலைவர் டிஸ்மிஸ் அதானி நிறுவன ஊழலை மறைக்காது'


ADDED : மே 13, 2025 04:07 AM

Google News

ADDED : மே 13, 2025 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : 'இந்திய சோலார் எனர்ஜி கழகத்தின் தலைவர் ஆர்.பி.குப்தாவை மத்திய அரசு பதவி நீக்கியதால், அதானி மீதான ஊழலை மறைக்க முடியாது' என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதாவது:



பொதுத்துறை நிறுவனமான எஸ்.இ.சி.ஐ., எனப்படும் இந்திய சோலார் எனர்ஜி கழகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்கள் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

இதற்காக அரசு அதிகாரிகளுக்கு 2,029 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, எஸ்.இ.சி.ஐ., மீது, கடந்த 2024 நவம்பர் 20ம் தேதி அமெரிக்க அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், கடந்த 2024 டிசம்பரில் எஸ்.இ.சி.ஐ., மின்சார டெண்டர்களை வழங்கும் முறையை மாற்றியது.

இது அவர்களின் ஊழலை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் வகையில் உள்ளது-. தற்போது, எஸ்.இ.சி.ஐ.,யின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான குப்தாவின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், அதானியின் ஊழலை மறைத்துவிட முடியாது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

திடீர் நீக்கம்


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட எஸ்.இ.சி.ஐ., எனப்படும் 'இந்திய சூரிய ஆற்றல் கழகம்' முன்னணி 'நவரத்னா' அந்தஸ்து பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். கடந்த 1987ம் ஆண்டு குஜராத் ஐ.ஏ.எஸ்., கேடரை சேர்ந்த குப்தா, கடந்த ஜூன் 15, 2023ல், எஸ்.இ.சி.ஐ.,யின் தலைமை பதவிக்கு இரண்டாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார். குப்தாவின் பதவிக்காலம் அடுத்த மாதத்தில் முடிவதற்கு முன் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணி நீக்கத்துக்கான காரணம் எதையும் அரசு குறிப்பிடவில்லை.








      Dinamalar
      Follow us