'சோலார் எனர்ஜி தலைவர் டிஸ்மிஸ் அதானி நிறுவன ஊழலை மறைக்காது'
'சோலார் எனர்ஜி தலைவர் டிஸ்மிஸ் அதானி நிறுவன ஊழலை மறைக்காது'
ADDED : மே 13, 2025 04:07 AM

புதுடில்லி : 'இந்திய சோலார் எனர்ஜி கழகத்தின் தலைவர் ஆர்.பி.குப்தாவை மத்திய அரசு பதவி நீக்கியதால், அதானி மீதான ஊழலை மறைக்க முடியாது' என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருப்பதாவது:
பொதுத்துறை நிறுவனமான எஸ்.இ.சி.ஐ., எனப்படும் இந்திய சோலார் எனர்ஜி கழகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்கள் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டன.
இதற்காக அரசு அதிகாரிகளுக்கு 2,029 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, எஸ்.இ.சி.ஐ., மீது, கடந்த 2024 நவம்பர் 20ம் தேதி அமெரிக்க அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், கடந்த 2024 டிசம்பரில் எஸ்.இ.சி.ஐ., மின்சார டெண்டர்களை வழங்கும் முறையை மாற்றியது.
இது அவர்களின் ஊழலை மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் வகையில் உள்ளது-. தற்போது, எஸ்.இ.சி.ஐ.,யின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான குப்தாவின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், அதானியின் ஊழலை மறைத்துவிட முடியாது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.