UPDATED : ஜூலை 25, 2025 06:35 AM
ADDED : ஜூலை 25, 2025 01:04 AM

வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்கு சந்தைகள்
இறக்கத்துடன் முடிவடைந்தன. ஆசிய பங்கு சந்தைகளின் தொடர்ச்சியாக நேற்று
வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய பங்கு சந்தை குறியீடுகள் உயர்வுடன்
துவங்கின.
ஆனால், அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேற்றம்,
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நீடிக்கும் தாமதம், நிறுவனங்களின்
கலவையான காலாண்டு முடிவுகள் என அடுத்தடுத்த எதிர்மறை தாக்கத்தால், ஐ.டி.,
நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்று, லாபத்தை பதிவு
செய்தனர்.
இதனால், நாள் முழுதும் சந்தை குறியீடுகள் சரிவுடன்
வர்த்தகமாகின. முடிவில், நிப்டி, சென்செக்ஸ் 0.65 சதவீதம் இறக்கத்துடன்
நிறைவடைந்தன. இந்தியா -- பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்
தாக்கம், இன்றைய வர்த்தகத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
உலக சந்தைகள்
புதனன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை
பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின்
ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடன்
முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.
சரிவுக்கு காரணங்கள்
* தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
* அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் தாமதம்
* ஐ.டி., நிறுவன பங்குகளை அதிகளவில் விற்றது
நிப்டி: 25,062.10 மாற்றம்: 157.80 இறக்கம் சிவப்பு
சென்செக்ஸ்: 82,184.17
மாற்றம்: 542.47 இறக்கம் சிவப்பு
உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)
எட்டர்னல் 3.44
டாக்டர் ரெட்டீஸ் 1.72
டாடா மோட்டார்ஸ் 1.62
சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)
நெஸ்லே இந்தியா 5.57
டிரென்ட் 3.94
டெக் மஹிந்திரா 3.26
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் கோடி ரூபாய்க்கு பங்குகளை இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.24 சதவீதம் அதிகரித்து, 69.36 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா அதிகரித்து, 86.40 ரூபாயாக இருந்தது.

