sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பங்கு சந்தை நிலவரம்: கைகொடுத்த ஐ.டி., துறை

/

பங்கு சந்தை நிலவரம்: கைகொடுத்த ஐ.டி., துறை

பங்கு சந்தை நிலவரம்: கைகொடுத்த ஐ.டி., துறை

பங்கு சந்தை நிலவரம்: கைகொடுத்த ஐ.டி., துறை


UPDATED : ஆக 21, 2025 10:12 AM

ADDED : ஆக 21, 2025 12:46 AM

Google News

UPDATED : ஆக 21, 2025 10:12 AM ADDED : ஆக 21, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. அன்னிய முதலீடுகள் மீண்டும் வெளியேறத் துவங்கியதன் காரணமாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின.

ஜி.எஸ்.டி., சீர்திருத்தம், நடப்பாண்டின் இரண்டாவது அரையாண்டில், முக்கிய துறைகளில் நுகர்வை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது, ஐ.டி., துறை பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது ஆகிய காரணங்களால், சற்று நேரத்திலேயே, சந்தை குறியீடுகள் உயர்வு பாதைக்கு திரும்பின.

நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, சென்செக்ஸ் 341 புள்ளிகள் வரை உயர்வு கண்ட நிலையில், முடிவில் சற்று குறைந்து, சென்செக்ஸ் 213 புள்ளிகளுடன் நிறைவு செய்தது. தொடர்ச்சியாக, ஐந்தாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் உயர்வுடன் நிறைவு செய்தன.

உலக சந்தைகள்


செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடுகள்சரிவுடனும்; ஹாங்காங்கின் ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் கலவையாக வர்த்தகமாகின.

உயர்வுக்கு காரணங்கள்


1 ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் நுகர்வை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை 2ஐ.டி., துறை பங்குகளை

முதலீட்டாளர்கள் வாங்கிக் குவித்தது

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 1,100 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.14 சதவீதம் குறைந்து, 66.54 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா அதிகரித்து, 87.07 ரூபாயாக இருந்தது.






      Dinamalar
      Follow us