ஒரகடத்தில் ரூ.525 கோடிக்கு ஆலை அமைக்கும் ஸ்வீடன் நிறுவனம்
ஒரகடத்தில் ரூ.525 கோடிக்கு ஆலை அமைக்கும் ஸ்வீடன் நிறுவனம்
UPDATED : பிப் 05, 2026 06:33 AM
ADDED : பிப் 05, 2026 03:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஸ்வீடன் நாட்டை சேர்ந்த, எலக்ட்ரானிக்ஸ் சாதன உதிரி பாகங்களை தயாரிக்கும் 'புல்டன்' குழுமம், அதன் இந்திய பிரிவான, 'பி.எஸ்.எம்., பாஸ்டனர்ஸ் இந்தியா' வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், 525 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
இதற்காக இந்நிறுவனம், சென்னையில் தொழில் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

