sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தொழில் துவங்க கொரிய நிறுவனத்துடன் பேச்சு

/

தொழில் துவங்க கொரிய நிறுவனத்துடன் பேச்சு

தொழில் துவங்க கொரிய நிறுவனத்துடன் பேச்சு

தொழில் துவங்க கொரிய நிறுவனத்துடன் பேச்சு


ADDED : பிப் 16, 2025 02:08 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில் 379 ஏக்கரிலும்; திருவள்ளூர் மாநல்லுாரில் 2,400 ஏக்கரிலும் தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைத்து வருகிறது.

இந்தியாவில் முதலீடுகளை அதிகரிப்பதற்காக, தென் கொரிய நாட்டைச் சேர்ந்த, 'டிவி, பிரிஜ்' உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தமிழகத்தில் தொழில் துவங்க, அதன் அதிகாரி களுடன் தமிழக அரசு சார்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், அந்நிறுவனத்தின் தலைவர், இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளார். அவரை சந்தித்து, அந்நிறுவனத்தின் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் தொழில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுஉள்ளனர்.

ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில், தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. அங்கு, வாஷிங் மிஷின் உட்பட பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகினறன.






      Dinamalar
      Follow us