sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜப்பானில் தமிழக அமர்வு

/

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜப்பானில் தமிழக அமர்வு

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜப்பானில் தமிழக அமர்வு

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜப்பானில் தமிழக அமர்வு


ADDED : ஜூலை 15, 2025 06:12 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; ஜப்பானில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து, தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்க, அந்நாட்டின் ஒசாகா நகரில், தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வை, அமைச்சர் ராஜா துவக்கி வைத்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில், 'எக்ஸ்போ 2025' உலக தொழில் கண்காட்சி நடக்கிறது. இதில் கலந்து கொண்டு முதலீடு களை ஈர்க்க, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா, வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது மற்றும் அதிகாரிகள் குழு, ஒசாகா நகருக்கு சென்றுள்ளது.

ஒசாகா நகரில், தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வை, அமைச்சர் ராஜா துவக்கி வைத்துஉள்ளார். அமர்வில் உள்ள அதிகாரிகள், ஜப்பான் தொழில் நிறுவனங்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க அரசு அளிக்கும் சலுகை உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து, முதலீடுகளை ஈர்க்கும்.

இதுகுறித்து, அமைச்சர் ராஜா அறிக்கையில், ''தமிழகத்தில், 580க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளன. ஜப்பானின் ஒசாகா, ஹிரோஷிமா, எஹிம் போன்ற நகரங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

''ஜப்பானில், வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வு திறக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வு, புதிய முதலீட்டாளர்களுக்கு சக்தி வாய்ந்த தொடர்பு புள்ளியாக இருக்கும்'' என, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us