sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பட்டியலிடாத நிறுவனமாக டாடா சன்ஸ் நீடிக்க அனுமதி

/

பட்டியலிடாத நிறுவனமாக டாடா சன்ஸ் நீடிக்க அனுமதி

பட்டியலிடாத நிறுவனமாக டாடா சன்ஸ் நீடிக்க அனுமதி

பட்டியலிடாத நிறுவனமாக டாடா சன்ஸ் நீடிக்க அனுமதி


ADDED : செப் 09, 2025 11:37 PM

Google News

ADDED : செப் 09, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சால்ட் முதல் சாப்ட்வேர் வரையான டாடா வணிக நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை கொண்ட டாடா சன்ஸ், பட்டியலிடப்படாத நிறுவனமாக தொடர ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

வங்கியல்லாத பெரிய நிதி நிறுவனங்கள், வரும் செப்., 30க்குள், பங்கு வெளியிட்டு சந்தைகளில் பட்டியலிடப்பட ரிசர்வ் வங்கி தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

என்.பி.எப்.சி., எனப்படும் வங்கியில்லாத நிதி நிறுவன உரிமத்தை டாடா சன்ஸ் கொண்டிருந்ததால், அதற்கும் இந்த விதி பொருந்தக்கூடியதாக இருந்தது. ஆனால், 2024 ஆக., மாதத்திலேயே தனது வங்கியல்லாத நிதி நிறுவன உரிமத்தை அந்நிறுவனம் ஒப்படைத்து விட்டது.

இதையடுத்து, தனிநபர்களின் கட்டுப்பாட்டில், பட்டியலிடப்படாத நிறுவனமாக தொடர, டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அந்நிறுவனத்தின் 66.80 சதவீத பங்குகள் டாடா அறக்கட்டளைகளின் வசமுள்ளன. 18.60 சதவீத பங்குகள் மிஸ்திரி குடும்பத்திடம் இருக்கின்றன.

கடன் சுமையில் தவிக்கும் மிஸ்திரி குடும்பத்தினர், டாடா சன்ஸ் நிறுவனம் பட்டியலிடப் பட்டால், பொதுப் பங்கு விற்பனை வாயிலாக கடனில் இருந்து வெளியே வரலாம் என எதிர் பார்த்திருந்தனர்.






      Dinamalar
      Follow us