sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பயிர் காப்பீட்டு திட்டத்தில் தேயிலை விவசாயம் தொழில்துறையினர் வரவேற்பு

/

பயிர் காப்பீட்டு திட்டத்தில் தேயிலை விவசாயம் தொழில்துறையினர் வரவேற்பு

பயிர் காப்பீட்டு திட்டத்தில் தேயிலை விவசாயம் தொழில்துறையினர் வரவேற்பு

பயிர் காப்பீட்டு திட்டத்தில் தேயிலை விவசாயம் தொழில்துறையினர் வரவேற்பு


ADDED : ஜூன் 16, 2025 12:45 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:நடப்பு காரீப் பருவத்தில் இருந்து, தேயிலை விவசாயம் ஆர்.டபிள்யூ.பி.சி.எஸ்., எனப்படும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சமீபத்தில் அறிவித்தது.

அரசின் இந்த முடிவுக்கு தேயிலை தொழிற்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கு பின் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை உற்பத்தியாளரான இந்தியா, கடந்த 2024ல் 1,382 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்திருந்தது.

முந்தைய 2023ம் ஆண்டில் இது 1,375 மில்லியன் கிலோவாக இருந்தது. மேலும், சிறிய தேயிலை விவசாயிகள் நாட்டின் மொத்த உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்கின்றனர். நாட்டின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலமாக அசாம் உள்ளது.

இதைத் தொடர்ந்து மேற்குவங்கம், தமிழகம், கர்நாடகா, கேரளா, திரிபுரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.






      Dinamalar
      Follow us