sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தில் ரூ.4,415 கோடியை வழங்கியது அரசு

/

உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தில் ரூ.4,415 கோடியை வழங்கியது அரசு

உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தில் ரூ.4,415 கோடியை வழங்கியது அரசு

உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தில் ரூ.4,415 கோடியை வழங்கியது அரசு


ADDED : ஜன 17, 2024 11:32 PM

Google News

ADDED : ஜன 17, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் அக்டோபர் வரையான காலத்தில், உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், அரசு எட்டு துறைகளுக்கு, 4,415 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலை தொடர்பு, ஜவுளி, மருத்துவ சாதனங்கள், வாகனங்கள், உணவுப் பொருட்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட 14 துறைகளுக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டங்களை, 1.97 லட்சம் கோடி ரூபாய் செலவில் அரசு, கடந்த 2021ம் ஆண்டில் அறிவித்தது.

இந்தத் திட்டங்கள், முக்கிய துறைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. மேலும், இந்திய நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களை உலகளவில் போட்டித்தன்மையுடன் வைத்து இருப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 - 23 நிதியாண்டில், மொத்தம் 2,900 கோடி ரூபாய் அரசு வழங்கி இருந்தது.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில், அக்டோபர் வரையான காலத்தில், 4,400 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு அமைப்பு


வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கான உற்பத்தி- சார் ஊக்குவிப்பு திட்டத்தில், கூடுதல் உதிரி பாக தொழில்களை சேர்க்க வேண்டும் என்ற வாகனத் துறையின் கோரிக்கையை ஆய்வு செய்வதற்காக, அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, மேலும் சில வாகன உதிரி பாக பிரிவுகளை இத்திட்டத்தில் இணைப்பது குறித்து, 11 பேர் கொண்ட குழு பரிசீலீக்க உள்ளது. வாகனத்துறையின் தேவையை கருதி, அதன் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம், மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us