ADDED : ஜூலை 19, 2026 03:09 AM

91,50,00,000
கடந்த ஜூலை 10ம் தேதி நிலவரப்படி நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 91.50 கோடி ரூபாய் அதிகரித்து 64 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
76,000
வெளிநாட்டு நாணய மாற்றமில்லா வங்கி வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர் 76,000 கோடி ரூபாய் வரை வங்கிகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக ஆர்.பி.ஐ., தகவல் தெரிவிக்கிறது.
28,840
மண்டல விமான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், திருத்தி அமைக்கப்பட்ட 'உடான்' திட்டத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு 28,840 கோடி ரூபாய் நிதி வழங்கவுள்ளது.
360
மத்திய பொதுத்துறை நிறுவனமான பி.ஹெச்.இ.எல்., மின்சார லாரிகள், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் 360 கிலோவாட்., அதிவேக சார்ஜர்களை உற்பத்தி செய்ய உள்ளது.
1,400
ஜே.எஸ்.டபுள்யூ., எம்.ஜி., மோட்டார் நிறுவனம், தனது கார் உற்பத்தியை விரிவாக்கம் செய்ய நடப்பு நிதியாண்டில் 1,400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
